Total Pageviews

Tuesday, 24 May 2022

எனது பள்ளி ஆசிரியர்கள்

ஆமை போல் 

தவழ்ந்து வந்த என்னை       

நடக்க  வைத்து,


குதிரை போல் 

Wednesday, 18 May 2022

என்னவாகுமோ?


குறிஞ்சியில் அருவியாய்  தொடங்கி,

முல்லையில் ஆறாய் ஓடி,

மருதத்தில் வயல்களில் பாய்ந்து,

நெய்தலில் சங்கமிக்கிறாய் கடலாய்...

ஒருவேளை நீரே

நீ  இல்லையெனில்

நானிலமும் பாலை நிலமாகிவிடுமோ?

                                -கி.கிருபா✍(கவிச்சிற்பி)




Thursday, 12 May 2022

ஆறு

தினம் தினம் இரசிக்கிறேன் உன்னை

சுற்றித் திரியும் குருவிகள் 

தத்தித் தவழும் மீன்கள்

மீன்களைப் பிடிக்க காத்திருக்கும்
ஒற்றைக்கால் கொக்குகள்

நீந்தி விளையாடும்
நீர் வாத்துகள்

வானை இரசிக்க மலரும்
மலர்கள்

வெட்கப்பட்டு நிற்காமல் 
ஓடும் நீர்

மனம் குளிர வைக்கும்
தென்றல் காற்று

இன்னும் சொல்லிக்கொண்டே போவேன் உன் அழகை

ஆனால் இரசிக்கத்தான் என்
இரு கண்கள் போதவில்லையே!!!

                                     _கிருபா✍(கவிச்சிற்பி)

இருபதுகளில் போதை 

தொண்ணூறுகளில் இளைஞர்கள் தம் நண்பர்களோடு  கில்லியும் பல்லாங்குழியும் விளையாடினர்