Total Pageviews

Wednesday, 18 May 2022

என்னவாகுமோ?


குறிஞ்சியில் அருவியாய்  தொடங்கி,

முல்லையில் ஆறாய் ஓடி,

மருதத்தில் வயல்களில் பாய்ந்து,

நெய்தலில் சங்கமிக்கிறாய் கடலாய்...

ஒருவேளை நீரே

நீ  இல்லையெனில்

நானிலமும் பாலை நிலமாகிவிடுமோ?

                                -கி.கிருபா✍(கவிச்சிற்பி)




10 comments:

  1. கவிதை மிக அருமை. சுற்றுச் சூழல் குறித்த உன் கவலை நியாயமானது. இளம் தலைமுறையினர் சற்றே விழிப்புணர்வுடன் செயல்பட்டால் புவி மாசைத் தவிர்க்க முடியும். அதனால் நீர் வளம் குன்றாமல், நால்வகை நிலமும் தம் இயல்பு மாறாமல் இருக்கும்.

    தொடர்ந்து வலைப்பூவில் உன் கருத்துகளை வெளியிடுக.

    ReplyDelete
  2. அழகான அருமையான வரிகள்...

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. குறுங்கவியாயினும் அருங்கவி.
    - கில்லர்ஜி

    ReplyDelete
  4. வரிகளை தேடி கோர்த்த தோழிக்கு வாழ்த்துகள்......

    ReplyDelete
  5. மிகவும் அருமையாக உள்ளது அக்கா

    ReplyDelete

இருபதுகளில் போதை 

தொண்ணூறுகளில் இளைஞர்கள் தம் நண்பர்களோடு  கில்லியும் பல்லாங்குழியும் விளையாடினர்